வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி!

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றது பற்றி...

News image

ஜி7 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ் (பிரதமர் மோடி)

Updated On :16 ஜூன் 2026, 7:53 pm IST

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) பங்கேற்றார்.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்கினார்.

தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸின் துறைமுக நகரான நைஸை சென்றடைந்த பிரதமர், அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

முதலில் பிரான்ஸ் பயணம் முடிந்து ஸ்லோவோக்கியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பெல்லேக்ரினியை சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க எவியான் லெ பெய்ன்ஸ் நகருக்கு சென்றார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:

ஜி7 உச்சி மாநாட்டுக்காக பிரான்சின் எவியான் நகரை வந்தடைந்தேன். உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டார்.

இந்த நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்று உலகத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சிறிது நேரம் உரையாடினார்.

ஜி7 மாநாடு என்பது உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள், ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் ஒரு அமைப்பாகும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது.

ஜி7 அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாத போதிலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Prime Minister Narendra Modi participated in the G7 summit being held in France on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.