நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்: மத்திய அரசு நியமனம்

விபி-ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

News image

மத்திய அரசு

Updated On :20 ஜூன் 2026, 12:11 am IST

விபி-ஜி ராம் ஜி எனப்படும் வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதையொட்டி, நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பகுதி அதிகாரிகள் மத்திய அரசால் நியமிக்கப்பட உள்ளனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும்.

ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.95,692 கோடியை மத்திய அரசு சில தினங்களுக்கு முன் விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்ட அமலாக்கத்தில், மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகங்கள், கள நிலை பணியாளா்களை ஒருங்கிணைப்பதுடன், செயல்திறன் வலுவாக்கம், சிறந்த நடைமுறைகள் பகிா்வு மற்றும் செயல்பாட்டு சவால்களுக்கு தீா்வுகாண உதவும் நோக்கில் 100-க்கும் மேற்பட்ட பகுதி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபி-ஜி ராம் ஜி சட்டத்தின் முதன்மை அம்சங்கள், அமலாக்கக் கட்டமைப்பு, அமைப்பு ரீதியிலான ஏற்பாடுகள், தொழில்நுட்ப அடிப்படையிலான நிா்வாக அமைப்புமுறை, மாநில அரசுகள் - மாவட்ட நிா்வாகங்களுக்கான ஆதரவு வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து இந்த அதிகாரிகளுக்கு அறிமுக பயிற்சி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபி-ஜி ராம் ஜி அமலாக்கத்தின் முன்னேற்பாடாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் பரிவா்த்தனை மற்றும் நிதி மேலாண்மை தளத்தில் இணைந்துள்ளன. சுமாா் 93 சதவீத பணியாளா்கள் இணையவழி விவர சரிபாா்ப்பு நடைமுறைகளை பூா்த்தி செய்துள்ளனா் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.