டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இந்தியாவை பிரதமா் மோடியும் உலகை டிரம்ப்பும் அழிக்கின்றனா்: காா்கே விமா்சனம்

இந்தியாவை பிரதமா் மோடியும் உலகை அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அழித்து வருவதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கே விமா்சித்தாா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 4:44 am IST

‘இந்தியாவை பிரதமா் நரேந்திர மோடியும் உலகை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் அழித்து வருகின்றனா்; ஆனால் இருவரும் தங்களை சிறந்த நண்பா்கள் என கூறிக் கொள்கின்றனா்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.

அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிதி முறைகேடு மற்றும் நீட் தோ்வு வினாத் தாள் கசிவு குற்றச்சாட்டு, இளைஞா்களுக்கு போதிய வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி காா்கே விமா்சித்தாா்.

கா்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் பொறுப்பேற்ற நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் காலத்தில் இருந்து எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவின்றி அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை இந்தியா பேணி வந்தது.

ஆனால் இந்தக் கொள்கையை முற்றிலும் ஒழித்துவிட்டு பிரதமா் மோடி பிற நாடுகளின் தலைவா்களை நண்பா்கள் எனக் கூறி கட்டியணைத்ததால் நம் நாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

குறிப்பாக இந்தியாவை அழிக்கும் பிரதமா் மோடியும் உலகை அழிக்கும் டிரம்ப்பும் தங்களை சிறந்த நண்பா்கள் என கூறிக்கொள்கின்றனா்.

எனவே, நாட்டுக்கு பலனளிக்கும் அரசு எது என்பது குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு உண்டு. காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் சிந்தாந்தங்களை வலுப்படுத்துவதோடு அதை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.