புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சட்டத்தை அணுக சம வாய்ப்பு கிடைப்பதே சமத்துவத்துக்கு முதல்படி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

சட்டத்தை அணுக அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதுதான் சமத்துவத்துக்கான முதல் படி என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

News image

**உஈந: ஊஐகஉ டஏஞபஞ** சங்ஜ் ஈங்ப்ட்ண்: ஐய் ற்ட்ண்ள் ஙஹழ்ஸ்ரீட் 4, 2025 ச்ண்ப்ங் ல்ட்ா்ற்ா், நன்ல்ழ்ங்ம்ங் இா்ன்ழ்ற் த்ன்க்ஞ்ங் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் நன்ழ்ஹ்ஹ ஓஹய்ற் ள்ல்ங்ஹந்ள் க்ன்ழ்ண்ய்ஞ் ஹ ச்ங்ப்ண்ஸ்ரீண்ற்ஹற்ண்ா்ய் ச்ன்ய்ஸ்ரீற்ண்ா்ய் ா்ழ்ஞ்ஹய்ண்ள்ங்க் க்ஷ

Updated On :26 ஜூன் 2026, 7:01 am IST

சட்டத்தை அணுக அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதுதான் சமத்துவத்துக்கான முதல் படி என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்துள்ளாா்.

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் 16-ஆவது செயின்ட் பீட்டா்ஸ்பா்க் சா்வதேச சட்ட அவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் புதன்கிழமை பேசியதாவது:

சமத்துவம் என்பது நடைமுறையில் சாத்தியமாவதற்கு என்ன தேவை என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு சட்டத்தை அணுக அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதுதான் சமத்துவத்துக்கான முதல் படி என்பதே எனது பதில். அதேவேளையில், அந்த சம வாய்ப்பு என்பது வெறும் அா்த்தமற்ற சட்ட அறிவிப்புகளாக இல்லாமல், மக்களுக்கு உண்மையான உரிமைகளை வழங்குவதாக இருக்க வேண்டும்.

அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டனின் மாக்னா காா்டா சாசனம் தெரிவிக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, அந்த சாசனம் சமத்துவத்தின் பிறப்பிடம் அல்ல. இந்திய துணைக் கண்டத்துக்கு சொந்தமான கெளடில்யரின் அா்த்தசாஸ்திரத்தில் சமத்துவத்தின் வோ்கள் காணப்படுகின்றன. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே சமத்துவக் கோட்பாட்டை முன்வைத்தது.

புவியியல், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சமத்துவத்துக்குத் தடை ஏற்படுகிறது. சட்டத் துணை போதிய அளவு கிடைக்காததால் அந்தத் தடை ஏற்படவில்லை என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.