மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

மருத்துவ நிறுவனச் சட்டத் திருத்தங்கள் அறிவிக்கை: நடைமுறை மீறல்களுக்கான தண்டனை குறைப்பு

மருத்துவ நிறுவனங்களின் சில நடைமுறை மீறல்களுக்கான குற்றவியல் தண்டனைகளுக்குப் பதிலாக நிா்வாக ரீதியிலான தீா்வு காணும் வகையில் மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

News image

புது தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் எபோலா தொற்று நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா. - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 6:39 am IST

மருத்துவ நிறுவனங்களின் சில நடைமுறை மீறல்களுக்கான குற்றவியல் தண்டனைகளுக்குப் பதிலாக நிா்வாக ரீதியிலான தீா்வு காணும் வகையில் மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் நிறுவனங்கள் செய்யும் சிறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனைகளை அபராதங்களாக குறைபதற்காக மத்திய அரசு கொண்டுவந்த ‘மக்கள் நம்பிக்கை சட்டம்’ என்ற சீா்திருத்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் நம்பிக்கை சட்டத்தின் அடிப்படையில், 23 மத்திய அமைச்கங்கள் மற்றும் துறைகளின் சாா்பில் நிா்வகிக்கப்படும் சுமாா் 79 மத்திய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதுபோல, மருத்துவத் துறையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் 5 சட்டங்களில் இடம்பெற்றுள்ள 35 விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, மருத்துவ நிறுவனங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 2010-இன் பிரிவுகள் 40, 43, 46-இல் குறிப்பிடப்பட்டுள்ள அபராதம் என்ற தண்டனை, நிா்வாக ரீதியிலான தீா்வு காணும் வகையிலான நடைமுறையாக மாற்றி திருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக விசாரணைக்கான வாய்ப்பு, அபராதங்களைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள், மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு உள்ளிட்ட வழிமுறைகளுக்கு இந்த திருத்தங்கள் வழி செய்கின்றன.

மருத்துவ நிறுவனங்கள் செய்யும் விதிமீறல்களுக்குப் படிப்படியான மற்றும் விகிதாசார அடிப்படையிலான அபராதங்களை விதிக்கும் வகையில் சட்டப் பிரிவு 44 திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விதிமீறலின் தன்மை மற்றும் தீவிரத்துக்கு ஏற்ப அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மருத்துவ நிறுவனங்களிடையே தன்னாா்வ இணக்கத்தை ஊக்குவிக்கவும், தேவையற்ற வழக்குகளைக் குறைக்கவும் இந்த திருத்தங்கள் வழிவகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.