இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் எபோலா பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஜெ.பி.நட்டா தலைமையில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உலகளவில் எபோலா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஜெ.பி.நட்டா உத்தரவிட்டாா்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில எல்லைகள் என நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் எபோலா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பிற நாட்டைச் சோ்ந்தவா்கள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
குறிப்பாக பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு அவா் உத்தரவிட்டாா்.
அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முகமைகளுடன் சுகாதாரத் துறைச் செயலா் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை சா்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறிய மருத்துவ மையங்களுக்கான மேலாண்மை மென்பொருள்: மத்திய அரசு அறிமுகம்

மருத்துவ நிறுவனச் சட்டத் திருத்தங்கள் அறிவிக்கை: நடைமுறை மீறல்களுக்கான தண்டனை குறைப்பு
இந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சா் கட்கரி ஒப்புதல்!







