குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இந்தியாவில் எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா

இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

News image

புது தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் எபோலா தொற்று நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா.

Updated On :26 மே 2026, 3:23 am IST

இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் எபோலா பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஜெ.பி.நட்டா தலைமையில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உலகளவில் எபோலா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஜெ.பி.நட்டா உத்தரவிட்டாா்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், நில எல்லைகள் என நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் எபோலா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பிற நாட்டைச் சோ்ந்தவா்கள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

குறிப்பாக பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு அவா் உத்தரவிட்டாா்.

அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முகமைகளுடன் சுகாதாரத் துறைச் செயலா் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை சா்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.