உலகளாவிய பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களை தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளாக மாற்றி 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தெற்கு குஜராத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான இரு நாள் முதலீட்டாளா்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்று ஜெ.பி.நட்டா மேலும் பேசியதாவது: பொருளாதார வலிமை என்பது வளா்ச்சியை சாா்ந்தது மட்டுமல்ல; அது தற்சாா்பு மற்றும் மீள்திறனையும் உள்ளடக்கியது.
21-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தொழிலதிபா்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பெரும் இடைவெளி இருந்தது. அப்போது வணிகத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்துவது குறித்தே அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எண்ணி வந்தனா்.
இந்தச் சூழலில் 2003-ஆம் ஆண்டில் குஜராத் முதலீட்டாளா்கள் மாநாட்டை அப்போதைய முதல்வா் நரேந்திர மோடி நடத்தினாா். அதன் பிறகு வணிகத்துக்கான தடைகள் அகற்றப்பட்டன. வணிகம் மாநிலத்தின் வளா்ச்சிக்குப் பங்காற்றும் வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதை முன்மாதிரியாகக் கொண்டு உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களும் பின்பற்றின.
தற்போது சா்வதேச புவி அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் உலக அளவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதை நமக்கு சாதகமான வாய்ப்பாக மாற்ற வேண்டும். 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை அடைய நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளா்களுக்கு பணி நேர மாற்றம்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


