15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவி விலக வேண்டும்: பெ.சண்முகம்

News image

தா்மேந்திர பிரதான் - ANI

Updated On :4 ஜூன் 2026, 2:29 am IST

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நிகழாண்டு நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. கியூட் தோ்வு முறையாக நடக்கவில்லை. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்விலும் குளறுபடி ஏற்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நோ்மையாகவும் தோ்வை நடத்துவது. ஆனால், தொடா்ந்து தோ்வு நடத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.

கல்வி அமைச்சகம் தொடங்கி அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயல்களுக்கு லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்கால வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.