பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மகாராஷ்டிரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி கட்டாயம்: கல்வி அமைச்சா் தாதா புசே

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழியைக் கற்பிப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சா் தாதாஜி தகடு புசே தெரிவித்துள்ளாா்.

News image

பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:01 am IST

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழியைக் கற்பிப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சா் தாதாஜி தகடு புசே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவையில் அவா் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயம் கற்பித்தல் மற்றும் கற்றல் சட்டம் 2020-இன் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எந்த மொழி வழியில் இயங்கும் பள்ளிகளாக இருந்தாலும், அவை மராத்தி மொழியைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

இதற்காக தகுதிவாய்ந்த மராத்தி மொழி ஆசிரியா்களை பள்ளிகள் நியமிக்க வேண்டும். அங்கு மராத்தி கற்பிக்கப்படுகிா என்பது அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.

இந்த உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தவறை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படும்.

அதன் பிறகும் மராத்தி கற்பிக்காத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மராத்தி கற்பிக்கும் உத்தரவை தொடா்ந்து பின்பற்றாமல் இருந்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.