வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

துபையில் சிக்கியவர்களுடன் காணொலியில் பேசிய சித்தராமையா!

ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், துபையில் சிக்கியுள்ள மக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பு மூலம் பேசினார்.

News image

மத்திய கிழக்கில் உள்ளவர்களுடன் விடியோ அழைப்பில் சித்தராமையா - படம் : ஏன்என்ஐ

Updated On :1 மார்ச் 2026, 3:53 pm

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், துபையில் சிக்கியுள்ள மக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பு மூலம் இன்று (மார்ச் 1) பேசினார்.

கர்நாடகத்தின் பல்லாரி தொகுதி எம்.எல்.ஏ. உள்பட அப்பகுதியைச் சேர்ந்த 32 பேர் துபையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பில் உரையாடினார்.

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அரேபிய வளைகுடாவில் அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. இதனால், துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவின் கெம்பகெளடா விமான நிலையத்தில் இருந்து மட்டும் 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளதாவது:

''ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் கர்நாடக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் நாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

புது தில்லியில் உள்ள குடியுரிமை ஆணையருடன் நான் ஆலோசனை நடத்தி, நமது மக்களைப் பாதுகாக்கத் தேவையான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Karnataka CM Siddaramaiah spoke to people stranded in Dubai through a video call

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.