ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

துபையில் சிக்கியவர்களுடன் காணொலியில் பேசிய சித்தராமையா!

ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், துபையில் சிக்கியுள்ள மக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பு மூலம் பேசினார்.

News image
மத்திய கிழக்கில் உள்ளவர்களுடன் விடியோ அழைப்பில் சித்தராமையா- படம் : ஏன்என்ஐ
Updated On :1 மார்ச் 2026, 3:53 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், துபையில் சிக்கியுள்ள மக்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பு மூலம் இன்று (மார்ச் 1) பேசினார்.

கர்நாடகத்தின் பல்லாரி தொகுதி எம்.எல்.ஏ. உள்பட அப்பகுதியைச் சேர்ந்த 32 பேர் துபையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முதல்வர் சித்தராமையா விடியோ அழைப்பில் உரையாடினார்.

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து அரேபிய வளைகுடாவில் அபு தாபி, துபை, தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் வான் வழி தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது. இதனால், துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவின் கெம்பகெளடா விமான நிலையத்தில் இருந்து மட்டும் 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளதாவது:

''ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் கர்நாடக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், இஸ்ரேல் மற்றும் கத்தார் நாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

புது தில்லியில் உள்ள குடியுரிமை ஆணையருடன் நான் ஆலோசனை நடத்தி, நமது மக்களைப் பாதுகாக்கத் தேவையான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.