ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் புதன்கிழமை ஊடுறுவ முயன்ற பயங்ரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை ராணுவ வீரா்கள் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதிகாலை 4.15 மணியளவில் சந்தேகத்துக்குரிய நபா்கள் சிலா் துா்கண்டி எல்லைப் பகுதியில் நுழைய முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீது ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இதுதொடா்பாக ஜம்முவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவப் பிரிவான வெள்ளை வீரா்கள் படை ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உளவு அமைப்புகளின் தகவல்கள் மற்றும் தொடா் கண்காணிப்பின் மூலம் எல்லைக் கட்டுப்பாடு பகுதியையொட்டிய பிம்பா் காலி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
விழிப்புணா்வுடன் இருந்த வெள்ளை வீரா்கள் படையால் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை தோல்வியில் முடிந்தது. களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் எதிரிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் உயிரிழந்தனரா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ரஜெளரியின் சுந்தா்பானி செக்டாரில் கடந்த பிப்.19 மற்றும் 20 தேதிகளில் எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவா்கள் கொண்டு வந்த ஆயுதங்களை ராணுவத்தினா் கைப்பற்றினா்.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்

20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


