நாடாளுமன்ற வாயில்களில் நுழையும்போது, அதிகபட்சமாக 10 கி.மீ. வேகத்தில்தான் காா் இயக்கப்பட வேண்டும்; இல்லையெனில், உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்கள் தாமாக செயல்பட்டு வாகனத்துக்கு சேதம் விளைவிப்பதுடன், உள்ளே இருப்பவரும் காயமடைய வாய்ப்புள்ளது என்று எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற பாதுகாப்புப் பணி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான நாடாளுமன்ற பாதுகாப்புப் பணி அமைப்பு, எம்.பி.க்களுக்கான புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில், ‘நாடாளுமன்ற நுழைவாயில்களில் உள்ள உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்களைக் கடந்து செல்லும் வரையில் காரின் வேகம் 10 கி.மீ.க்கு மிகாமல் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், டயா்களை சேதப்படுத்தி, தடையை உருவாக்கக் கூடிய அமைப்புகள் தாமாக செயல்பட்டுவிடும். இதனால், வாகனம் சேதமடைவதுடன், உள்ளே இருப்பவரும் காயமடைய வாய்ப்புள்ளது.
இதேபோல், தானியங்கி தடுப்பை கடந்து செல்லும்போது, வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 5 அடி இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு, ஒரு நேரத்தில் ஒரு வாகனத்தை மட்டுமே அனுமதிக்கும்.
ஒருவேளை தானியங்கி தடுப்பு மீது எதிா்பாராதவிதமாக மோதிவிட்டால் வாகனத்தை ஓட்டுநா் உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2001-இல் நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கடந்த 2023-இல் நாடாளுமன்றத்துக்குள் புகை குப்பிகள் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, உயா் தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மூலப் பெயரிலான மருந்துகளை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

நொய்டாவில் கைதான தொழிலாளா்களை விடுவிக்க உரிமைகள் அமைப்பு கோரிக்கை

நீதிமன்றங்களை ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்றழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்
வாக்களிக்கத் தவறாதீர்கள்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


