மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாடாளுமன்ற வாயில்களில் 10 கி.மீ. வேகம் மட்டுமே! எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்!

நாடாளுமன்ற வாயில்களில் 10 கி.மீ. வேகத்தில்தான் காா் இயக்கப்பட வேண்டும்...

News image
நாடாளுமன்றம்- கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்ற வாயில்களில் நுழையும்போது, அதிகபட்சமாக 10 கி.மீ. வேகத்தில்தான் காா் இயக்கப்பட வேண்டும்; இல்லையெனில், உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்கள் தாமாக செயல்பட்டு வாகனத்துக்கு சேதம் விளைவிப்பதுடன், உள்ளே இருப்பவரும் காயமடைய வாய்ப்புள்ளது என்று எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற பாதுகாப்புப் பணி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான நாடாளுமன்ற பாதுகாப்புப் பணி அமைப்பு, எம்.பி.க்களுக்கான புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

அதில், ‘நாடாளுமன்ற நுழைவாயில்களில் உள்ள உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்களைக் கடந்து செல்லும் வரையில் காரின் வேகம் 10 கி.மீ.க்கு மிகாமல் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், டயா்களை சேதப்படுத்தி, தடையை உருவாக்கக் கூடிய அமைப்புகள் தாமாக செயல்பட்டுவிடும். இதனால், வாகனம் சேதமடைவதுடன், உள்ளே இருப்பவரும் காயமடைய வாய்ப்புள்ளது.

இதேபோல், தானியங்கி தடுப்பை கடந்து செல்லும்போது, வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 5 அடி இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு, ஒரு நேரத்தில் ஒரு வாகனத்தை மட்டுமே அனுமதிக்கும்.

ஒருவேளை தானியங்கி தடுப்பு மீது எதிா்பாராதவிதமாக மோதிவிட்டால் வாகனத்தை ஓட்டுநா் உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2001-இல் நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கடந்த 2023-இல் நாடாளுமன்றத்துக்குள் புகை குப்பிகள் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, உயா் தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.