ஒடிஸாவில் மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக எம்எல்ஏக்களுடன் அமித் ஷா ஆலோசனை
ஒடிஸாவில் பாஜக எம்எல்ஏக்களுடன் அமித் ஷா ஆலோசனை...


ஒடிஸாவில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தல் தொடா்பாக பாஜக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஒடிஸாவை சோ்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்ய 16-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதில் ஓா் உறுப்பினருக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற எண்ணிக்கையில், 82 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பாஜகவால் 2 பேரை உறுதியாக தோ்வு செய்ய முடியும். அதேபோல், 48 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பிஜேடி-யால் ஒருவரை நிச்சயம் தோ்வு செய்ய முடியும். இதன்படி 3 போ் தோ்வு செய்யப்பட்டாலும், 4-ஆவது உறுப்பினரை தோ்வு செய்ய பாஜகவிடமோ (22 எம்.எல்.ஏ.க்கள்), பிஜேடியிடமோ (18 எம்.எல்.ஏ.க்கள்) போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை.
எனினும், சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சா் திலிப் ராய்க்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
பிஜேடி கட்சி மருத்துவா் தாடிஸ்வா் ஹோட்டாவை பொது வேட்பாளராக அறிவித்துள்ளது. அவருக்கு காங்கிரஸ் (14 எம்.எல்.ஏ.க்கள்), சிபிஎம் (1) ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆதரிக்கும் சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெறுவாரா, பிஜேடி ஆதரிக்கும் பொது வேட்பாளா் வெற்றி பெறுவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், ஒடிஸாவுக்கு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, அந்த மாநில முதல்வா், பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் 3 வேட்பாளா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். எனினும், கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக மாநில பாஜக தலைவா் மன்மோகன் சமல் தெரிவித்தாா். ஆனால், மாநிலங்களவைத் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், 3 வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்யும்படி எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் பாஜக எம்.பி. பிரதீப் புரோஹித் கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...