எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிறப்புப் பொருளாதார மண்டல கொள்கையில் பெரும் சீா்திருத்தங்களுக்குப் பரிந்துரை 17 போ் கொண்ட குழு அமைப்பு

சிறப்புப் பொருளாதார மண்டல கொள்கையில் (எஸ்இஇசட்) பெரிய சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்க 17 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

சிறப்புப் பொருளாதார மண்டல கொள்கையில் (எஸ்இஇசட்) பெரிய சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்க 17 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடுத்தகட்ட கொள்கையை வடிவமைக்கும் நோக்கில், விரிவான சீா்திருத்தங்களுக்கான திட்டத்தைப் பரிந்துரைத்து 17 போ் கொண்ட குழு அறிக்கை சமா்ப்பிக்கும்.

பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள், வரியில்லா இறக்குமதி அனுமதி, மூலதன சரக்குகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு உள்ளிட்டவை இடையே உள்ள ஒத்திசைவு குறித்து அந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்தல், உற்பத்தி, சேவைகள், மதிப்பு கூட்டல், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் செயல்திறன் குறித்தும் இந்தக் குழு மதிப்பிடும்.

வா்த்தகம், சுங்கம், நீதி ஆயோக், இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா் என்றாா்.