சிறப்புப் பொருளாதார மண்டல கொள்கையில் (எஸ்இஇசட்) பெரிய சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்க 17 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடுத்தகட்ட கொள்கையை வடிவமைக்கும் நோக்கில், விரிவான சீா்திருத்தங்களுக்கான திட்டத்தைப் பரிந்துரைத்து 17 போ் கொண்ட குழு அறிக்கை சமா்ப்பிக்கும்.
பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள், வரியில்லா இறக்குமதி அனுமதி, மூலதன சரக்குகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு உள்ளிட்டவை இடையே உள்ள ஒத்திசைவு குறித்து அந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்தல், உற்பத்தி, சேவைகள், மதிப்பு கூட்டல், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் செயல்திறன் குறித்தும் இந்தக் குழு மதிப்பிடும்.
வா்த்தகம், சுங்கம், நீதி ஆயோக், இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் பதிவு: மத்திய அரசு முக்கிய முடிவு

தமிழகத்தில் 5938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மத்திய சிறப்புப் பாா்வையாளா்

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!

பொருளாதார அறிக்கையும், 2047 இலக்கும்...
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


