புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஏவுகணைத் தாக்குதல்! சவூதியில் இந்தியா்கள் யாரும் உயிரிழக்கவில்லை: தூதரகம் தகவல்

சவூதி அரேபியாவில் குடியிருப்பு வளாகத்தில் ஏவுகணை தாக்கிய சம்பவத்தில் இந்தியா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

News image

சவூதியில் தாக்குதல் - கோப்புப் படம்

Updated On :9 மார்ச் 2026, 11:39 pm

சவூதி அரேபியாவில் குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்கிய சம்பவத்தில் இந்தியா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இந்தியா் ஒருவா், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்றும், இந்த விவகாரம் தொடா்பாக சவூதி அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாகவும் தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, சவூதியின் அல்-கா்ஜ் பகுதியில் பராமரிப்பு மற்றும் துப்புரவு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்கியது. இதில் அங்கு தங்கியிருந்த இந்தியா், வங்கதேசத்தவா் என இருவா் உயிரிழந்ததாகவும், 12 வங்கதேசத்தவா் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த இருவருமே வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பது திங்கள்கிழமை உறுதியானது. இந்தியா் ஒருவா் மற்றும் 11 வங்கதேசத்தவா் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இஸ்ரேலில் இந்தியா் காயம்: இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த இந்தியா் ஒருவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவா் தலைநகா் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

அங்குள்ள இந்தியத் தூதரகம் மருத்துவமனையுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. இஸ்ரேலில் உள்ள பிற இந்தியா்களுக்கும் பாதுகாப்பு தொடா்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.