ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் சிறைத் தண்டனை! எஸ்மா சட்டம் அமல்!

எஸ்மா சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 6:58 am

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு உணவகத் தொழிலிலும், உணவு விநியோகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னரிமை அளித்தும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய நேரத்தில் அமல்படுத்தப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பதுக்கல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம் என்ற சட்டத்தை (ESMA - Essential Services Maintenance Act, 1968) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்திருப்பது, ஹோட்டல்கள், உணவக உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

The central government has implemented the ESMA Act to reduce the shortage of cooking gas cylinders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.