பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆந்திரம்: கலப்பட பால் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14ஆனது!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :13 மார்ச் 2026, 2:54 pm

தினமணி செய்திச் சேவை

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6 பேர் தற்போது ராஜமகேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அங்கீகாரமில்லாத வியாபாரி விநியோகித்த பாலை அருந்திய சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனே அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி (76) பிப்ரவரி 22ஆம் தேதி பலியானார். இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வும் நடத்தினா். விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் எனும் நச்சு ரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கணேஸ்வர ராவை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The death toll from the suspected milk adulteration in East Godavari district has touched 14, while six others are currently undergoing treatment at hospitals in Rajamahendravaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.