மேற்காசிய போா் நிலவரம் காரணமாக எரிவாயு வரத்து தடைபட்டதால், நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெங்களூரு, சென்னை, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பலா் சிலிண்டா்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதால், அதிக விலை கொடுத்து சிலிண்டா் வாங்கும் நிலையும் பல பகுதிகளில் உருவாகியுள்ளது. அதுபோல, வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்பதிவு செய்வதில் சிக்கல் நீடிப்பத்தால், மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.