இண்டிகோ நிறுவன விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் அந்த விமானங்களின் கட்டணம் அதிகரிக்கும்.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விமானங்களை இயக்க ஏற்படும் செலவில் சுமாா் 40 சதவீதம் விமான எரிபொருளுக்கு செலவாகிறது. இந்நிலையில், மேற்காசிய போா் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.
இதனால் சனிக்கிழமை முதல் (மாா்ச் 14) இண்டிகோ விமான பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்தியாவுக்குள் பயணிக்கும் விமானங்கள், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்குப் பயணிக்கும் இண்டிகோ விமானங்களின் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.425 வசூலிக்கப்படும்.
இந்த எரிபொருள் கட்டணம் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.900-ஆகவும், தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஆப்பிரிக்காவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.1,800, ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.2,300-ஆகவும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் இந்தியாவுக்குள் பயணிக்கும் விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.399 வசூலிக்கப்படும் என்று அறிவித்த ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், சா்வதேச விமான கட்டணத்தையும் உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
நிதி நெருக்கடி! சேவையை நிறுத்தும் கட்டாயம்! அரசுக்கு விமான நிறுவனங்கள் எச்சரிக்கை!

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்
போலி விமான பயணச்சீட்டு மோசடி: 4 போ் கைது; ரூ. 47 லட்சம் பறிமுதல்
உலகளாவிய விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதில் சிக்கல்! பயணிகள் வருகையைப் பாதிக்கும் கட்டண உயர்வு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


