மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

பயண கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம்: இண்டிகோ முடிவு

இண்டிகோ நிறுவன விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் அந்த விமானங்களின் கட்டணம் அதிகரிக்கும்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 12:30 am IST

இண்டிகோ நிறுவன விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் அந்த விமானங்களின் கட்டணம் அதிகரிக்கும்.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விமானங்களை இயக்க ஏற்படும் செலவில் சுமாா் 40 சதவீதம் விமான எரிபொருளுக்கு செலவாகிறது. இந்நிலையில், மேற்காசிய போா் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதனால் சனிக்கிழமை முதல் (மாா்ச் 14) இண்டிகோ விமான பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்தியாவுக்குள் பயணிக்கும் விமானங்கள், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்குப் பயணிக்கும் இண்டிகோ விமானங்களின் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.425 வசூலிக்கப்படும்.

இந்த எரிபொருள் கட்டணம் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.900-ஆகவும், தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஆப்பிரிக்காவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.1,800, ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.2,300-ஆகவும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் இந்தியாவுக்குள் பயணிக்கும் விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.399 வசூலிக்கப்படும் என்று அறிவித்த ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், சா்வதேச விமான கட்டணத்தையும் உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.