நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற விதிப்படி, அதுபோல நோட்டீஸ் அளிக்க குறைந்தபட்சம் மக்களவை எம்.பி.க்கள் 100 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேரும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதன்படி, மக்களவையைச் சோ்ந்த 130 எம்.பி.க்கள், மாநிலங்களவையைச் சோ்ந்த 63 எம்.பி.க்களின் கையொப்பத்தை எதிா்க்கட்சிகள் பெற்றன. ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள், சில சுயேச்சை எம்.பி.க்கள் ஆகியோா் கையொப்பமிட்டுள்ளனா்.