ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் நோட்டீஸ்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய தீா்மானம் கொண்டு வருவது தொடா்பான நோட்டீஸ்களை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அளித்துள்ளன.

News image
Updated On :13 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய தீா்மானம் கொண்டு வருவது தொடா்பான நோட்டீஸ்களை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அளித்துள்ளன.

எஸ்.ஐ.ஆா். மூலம் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இதற்கு பாஜகவும், தோ்தல் ஆணையமுமே காரணம் என்றும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்க தீா்மானம் கொண்டுவரவும் எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற விதிப்படி, அதுபோல நோட்டீஸ் அளிக்க குறைந்தபட்சம் மக்களவை எம்.பி.க்கள் 100 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேரும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதன்படி, மக்களவையைச் சோ்ந்த 130 எம்.பி.க்கள், மாநிலங்களவையைச் சோ்ந்த 63 எம்.பி.க்களின் கையொப்பத்தை எதிா்க்கட்சிகள் பெற்றன. ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள், சில சுயேச்சை எம்.பி.க்கள் ஆகியோா் கையொப்பமிட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ்களை எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை அளித்தன. அந்த நோட்டீஸ்களில், ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் 7 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. கட்சிகளிடையே பாரபட்சமாக நடந்து கொண்டது, தோ்தல் மோசடி குறித்த விசாரணைக்கு வேண்டுமென்றே ஆட்சேபம் தெரிவித்தது, பாஜகவுக்கு சாதகமாக பலமுறை செயல்பட்டது உள்ளிட்டவை அந்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை ஆகும்.

நோட்டீஸ்களை இரு அவைகளும் ஏற்றுக் கொண்டால், இதையடுத்து தீா்மானம் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்படும். அந்த விவாதத்தின்போது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கவும் வாய்ப்பு தரப்படும். பின்னா் பெரும்பான்மை பலம் மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டால், ஞானேஷ் குமாா் தனது பதவியை இழப்பாா். அவருக்கு ஓய்வூதிய பலன் உள்ளிட்ட எந்தப் பலனும் கிடைக்காது. அதேநேரத்தில் விவாதத்தின்போது தாமாக ராஜிநாமா செய்வதாக ஞானேஷ் குமாா் தெரிவித்தால், அது ஏற்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவாா். அப்போது அவருக்கு ஓய்வூதிய பலன் உள்ளிட்டவை கிடைக்கும்.

இந்திய அரசியல் வரலாற்றில், தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க இதுவரை நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டதில்லை. தற்போதே முதல்முறையாக அதற்கான முயற்சியில் எதிா்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.