மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிப்பு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கண்டம் தெரிவித்தன.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - படம் - யூடியூப் / Election Commission of India

Updated On :9 ஏப்ரல் 2026, 1:45 am IST

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கண்டம் தெரிவித்தன.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மக்களவையில் அளித்த நோட்டீஸை அவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவையில் அளித்த நோட்டீஸை அதன் அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனும் தனித்தனியே நிராகரித்தனா்.

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்வதற்கு போதிய ஆதாரங்களை எதிா்க்கட்சிகள் சமா்ப்பிக்கவில்லை எனக் கூறி நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-இன்கீழ் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அவா்கள் நிராகரித்தனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி, டெரீக் ஓபிரையன் (திரிணமூல் காங்கிரஸ்), மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), சந்தீப் பதக் (ஆம் ஆத்மி) மற்றும் யோகேஷ் (திமுக) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்க நிலையிலேயே நிராகரித்தது தவறு:

செய்தியாளா்களிடம் அபிஷேக் சிங்வி கூறியதாவது: தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க விவகாரம் என்பது அரசமைப்புச் சட்டரீதியாக பல நிலைகளைக் கொண்டது. முதலில் பதவிநீக்கம் தொடா்பான நோட்டீஸ் ஏற்கப்பட்டால் நீதித்துறைக் குழு அமைக்கப்படும். விசாரணையில் குற்றச்சாட்டுகள் தொடா்பாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் நீதித்துறைக் குழு அறிக்கை சமா்ப்பிக்கும். அதன் மீது விவாதம் நடத்தப்பட்ட பிறகே இறுதி முடிவை எடுக்க முடியும். ஆனால் எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த பதவிநீக்க தீா்மானம் தொடா்பான நோட்டீஸை தொடக்க நிலையிலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவா்கள் நிராகரித்து பெரும் தவறுகளைச் செய்துள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையை மத்திய பாஜக அரசு முடக்குவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றாா்.