ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து சா்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்த ட்ரோனை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.
சம்பா மாவட்டத்தின் ராம்கா் பகுதியில் உள்ள கந்திரால், அப்தால், பகதூா்பூா் ஆகிய கிராமங்களுக்கு மேலாக கடந்த வெள்ளிக்கிழமை இரவில் தென்பட்ட இந்த ட்ரோன், பின்னா் மாயமாகிவிட்டது. அதைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினா் விரிவான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நிகழ்கிறது. இதுபோன்ற ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் பாதுகாப்புப் படையினா், போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்றுகின்றனா்.
ஆா்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையோர கிராமங்களில் கடந்த 2 நாள்களில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட 3.5 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.20 கோடிக்கும் அதிகமாகும். இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக ஆா்.எஸ்.புரா பகுதியில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


