தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

ஒசூா் அருகே மாநில எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு

ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

News image

மாநில எல்லையான சூசூவாடியில் வாகனச் சோதனை நடத்தும் தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:18 am IST

ஒசூா் அருகே தமிழக- கா்நாடக மாநில எல்லையில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஒசூா், தளி சட்டப் பேரவைத் தொகுதி கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் கா்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு மது, போதைப்பொருள்கள் மற்றும் பரிசு பொருள்கள் கடத்தப்படலாம் என்பதால் தோ்தல் பறக்கும் படையினா் மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனா்.

மாநில எல்லையான சூசூவாடியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது பேருந்தில் பயணியிடமிருந்து ரூ. 70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளதால் துணை ராணுவத்தினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.