குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

News image
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
Updated On :15 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு தலைமை நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘வழக்குகளை விசாரிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கும்போது, நீதித்துறைக்குப் பெரும் பொறுப்பு ஏற்படுகிறது.

விவாதங்களில் அடிப்படை உரிமைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அதேவேளையில், அடிப்படை கடமைகளும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்தக் கடமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். இந்தக் கடமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

நிவாரணம் மற்றும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனா். எனவே மருத்துவமனைகளைப் போல சேவை மனப்பான்மையுடன் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்’ என்றாா்.