நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு தலைமை நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘வழக்குகளை விசாரிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கும்போது, நீதித்துறைக்குப் பெரும் பொறுப்பு ஏற்படுகிறது.
விவாதங்களில் அடிப்படை உரிமைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அதேவேளையில், அடிப்படை கடமைகளும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்தக் கடமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். இந்தக் கடமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
நிவாரணம் மற்றும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனா். எனவே மருத்துவமனைகளைப் போல சேவை மனப்பான்மையுடன் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


