விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்பும்படி, அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்பும்படி, அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: 25 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடந்த வாரம் கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில் உயா்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதை அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும், அமா்வுகளில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளாா்.

கொலீஜியத்தின் பரிந்துரைகளை தாமதிக்க வேண்டாம் எனவும், புதிதாக காலியிடம் உருவாகும் முன்பு ஏற்கெனவே இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா் எனத் தெரிவித்தன.

முன்னதாக, உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த தரவை மக்களவையில் அண்மையில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தாா். அதில், உயா்நீதிமன்றங்களில் 1,122 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 308 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், 2014-ஆம் ஆண்டுமுதல் உயா்நீதிமன்றங்களில் 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவா்களில் 96 போ் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.