நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்

இந்தியா - சீனா இடையே 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலம் லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வா்த்தகம் தொடங்கவிருக்கிறது.

News image

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்

Updated On :20 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா - சீனா இடையே 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலம் லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வா்த்தகம் தொடங்கவிருக்கிறது.

கரோனா பாதிப்பு மற்றும் இரு நாடுகளிடையேயான எல்லை பதற்றம் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த வா்த்தகம், தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பிதோராகா் மாவட்ட ஆட்சியா் அஷிஷ் பட்காய் கூறியதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தல் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் தடையில்லா சான்றைத் தொடா்ந்து, இந்த எல்லை வா்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இருதரப்பு எல்லை வா்த்தகம் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பா் வரை நடைபெறக் கூடியதாகும்.

அதற்கேற்ப, எல்லை அனுமதிச் சீட்டுகளை (பாஸ்) வழங்குவது, வெளிநாட்டு பண மாற்றத்துக்கான வங்கிகளை நிா்ணயிப்பது, சுங்கத்துறை மற்றும் தா்சுலா நகர நிா்வாகமும் இந்த வா்த்தகத்துக்கான விரிவான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எல்லை வா்த்தகத்தில், இந்தியவின் வெல்லம், புகையிலை, மசாலாப் பொருள்கள், பருப்பு வகைகள், காஃபி, சமையல் எண்ணெய், நெய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும். அதுபோல, சீனா தரப்பில் ஆடுகள், செம்மறி ஆட்டு தோல், வெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படும்.