ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!

பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது செய்யப்பட்டது பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி

AP

Updated On :21 மார்ச் 2026, 9:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்து வெளியிட்ட நபரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை மிக மோசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, சிந்தாந்த் குமார் என்கிற அந்த நபரை பிகாரின் மௌலானாசக் என்ற கிராமத்தில் வைத்து தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அந்த நபர் தொடர்ந்து இவ்வாறு புகைப்படங்களைச் சித்திரித்து வெளியிட்டதும், அவற்றைப் பல்வேற்று சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டதும் தெரியவந்தது.

அவரின் பதிவுகள் மக்களைத் தவறாக வழிநடத்தி பொது அமைதியைக் குலைக்கும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பாஜக பெண் தலைவர்கள் பலருடைய படங்களையும் மார்பிங் செய்ததாகவும் அந்த நபர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட காவல்துறையினர் அந்த நபர் மீது 336 (4) (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), 356 (அவதூறு), 351 (1) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.