உலகளாவிய போர் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான் என குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் 29 வது தேசிய அமர்வின் கூட்டம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அரங்கில் நடைபெற்றது.
நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் கருப்பொருள் 'இந்திய மொழிகள் மற்றும் வளர்ந்த இந்தியா - 2047' என்பதாகும்.
அங்கு உரையாற்றிய அவர், “தாய்மொழியில் பேசுவது என்பது பிராந்தியத்தைக் குறிப்பதல்ல; மாறாகத் தனித்துவத்தைக் குறிப்பதாகும்.
உலகம் முழுவதும் போரின் அச்சுறுத்தலில் இருக்கும்போது, பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான விவாதம், மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கேட்டறிதல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு நமக்குக் கற்றுத் தருகிறது.
மொழிகள் குறித்த இந்தத் தலைப்பு காலத்தின் தேவையாகும். நாட்டில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் தாயை நேசிக்கிறார்கள். அதேபோல, ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை நேசிக்கிறார்கள்.
ஆனால் அதற்காக நாம் மற்றொருவரின் தாயை மதிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. நாம் நமது தாய்மொழியில் பேசும்போது, வட்டார வழக்கில் பேசுவதில்லை. வட்டார வழக்கில் பேசுவதுதான் நமது தனித்துவம்” என்று வலியுறுத்தினார்.
Summary
Vice President C.P. Radhakrishnan has said that dialogue is the only way to find a solution amid global threats of war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை: குடியரசுத் துணைத்தலைவர்

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!

மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!

பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!
விடியோக்கள்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3



