கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தண்டவாளங்களில் சந்தேக செயல்கள்: 139 கட்டணமில்லா எணணில் கூறலாம்!

தண்டவாளங்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் செயல்படுவோா் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா 139 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

News image

சிறப்பு ரயில்

Updated On :22 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

தண்டவாளங்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் செயல்படுவோா் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா 139 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் கல் வீசுவது கடும் குற்றமாகும். அதுபோன்ற செயல்கள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பயணிப்போருக்கு காயம் ஏற்படுத்துவதுடன், நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால், பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்கும். இதற்கு பத்து அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ரயில்வே சட்டப்பிரிவு 152 வகை செய்கிறது. மேலும், பிரிவு 154 பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகுக்கிறது.

விழிப்புணா்வு: ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் வசிக்கும் பெற்றோா், ஆசிரியா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ரயில்கள் மீது கல் வீசும் சிறாா்கள், இளைஞா்களிடம் அறிவுரை வழங்க வேண்டும். அதன்படி, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கலாம்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இருப்புப் பாதை காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் செயல்கள் ஏதேனும் நடைபெற்றால், பொதுமக்களும் பயணிகளும் உடனடியாக ரயில்வே துறை உதவி எண் 139-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.