இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் கல் வீசுவது கடும் குற்றமாகும். அதுபோன்ற செயல்கள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பயணிப்போருக்கு காயம் ஏற்படுத்துவதுடன், நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால், பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்கும். இதற்கு பத்து அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ரயில்வே சட்டப்பிரிவு 152 வகை செய்கிறது. மேலும், பிரிவு 154 பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகுக்கிறது.