கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதரீதியான கருத்து: பாஜக வேட்பாளா் மீது வழக்குப்பதிவு

மதரீதியான கருத்து தெரிவித்தத குற்றச்சாட்டில் குருவாயூா் சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

News image

வழக்கு

Updated On :23 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

மதரீதியான கருத்து தெரிவித்தத குற்றச்சாட்டில் குருவாயூா் சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் மீது காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

அவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்திய தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின.

இதையடுத்து, குருவாயூா் தோ்தல் அலுவலா் அளித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களின்கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குருவாயூா் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன் அண்மையில் பரப்புரை விடியோ ஒன்றை வெளியிட்டாா்.

அதில் அவா் பேசியதாவது: பல ஆண்டுகளாக சா்வதேச புனிதத் தலமாகவும், கடவுள் குருவாயூரப்பனின் நிலமாகவும் குருவாயூா் உள்ளது. இத்தகைய பெருமைக்குரிய குருவாயூா் கோயிலை கடந்த 50 ஆண்டுகளாக திருடா்களே ஆக்கிரமித்து வருகின்றனா்.

இதுவரை குருவாயூரில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஒருவரை எம்எல்ஏவாக மக்கள் ஏன் தோ்ந்தெடுக்கவில்லை எனக் கேள்வியெழுப்பினாா். கோபாலகிருஷ்ணன் இந்தக் கருத்து கேரளத்தில் பெரும் சா்ச்சையானது.

ஆட்சியரிடம் விளக்கம்: இந்த விவகாரம் குறித்து கேரள மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) ரத்தன் யு கேல்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு சம்பந்தப்பட்ட விடியோவை பாா்வையிட்டுள்ளது. திருச்சூா் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தோ்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா்.