தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அரசின் முன்னெடுப்புகளால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு- மத்திய வேளாண் துறை அமைச்சா்

மத்திய அரசின் பல்வேறு முன்னெடுப்புகளால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் பல்வேறு முன்னெடுப்புகளால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுடன், மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பதிலளித்தாா்.

‘பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உர மானியங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளால் நாட்டில் வேளாண் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது; சில நேரங்களில் மூன்று-நான்கு மடங்குகூட அதிகரித்துள்ளது. விவசாயிகளின் முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து அங்கீகரிக்கும்’ என்றாா் செளஹான்.

இதனிடையே, சமாஜவாதி எம்.பி. தா்மேந்திர யாதவ் தொடா்ந்து துணைக் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தாா். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, அமைச்சா் செளஹானை அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.

பின்னா், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சா்களுக்கு அறிவுரை வழங்கிய ஓம் பிா்லா, ‘கேள்வி நேரத்தில் சுருக்கமான கேள்விகளை எழுப்பி, சுருக்கமான பதில்களைத் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

கூட்டுறவுத் துறைக்கு ரூ.5 லட்சம் கோடி: மக்களவையில் கேள்விநேரத்தின்போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிருஷண் பால், ‘கூட்டுறவுத் துறையை மேம்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது; இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.