தேவாலயத்தில் பிரசாரம் தொடங்கினாா் மம்தா- மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம் என உறுதி
வடக்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேவாலயத்தில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘மாநிலத்தில் மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம்’ என்று உறுதியளித்துப் பேசினாா்.

மேற்கு வங்க மாநிலம் சால்சாவில் உள்ள புனித லூசி தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தைத் தொடங்கிய மம்தா பானா்ஜி.








