சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மேற்கு வங்க முதல்வா் நிகழ்ச்சியில் மம்தாவின் சகோதரா் மனைவி பங்கேற்பு

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலா்களுடன் திங்கள்கிழமை நடத்திய சந்திப்பில், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் சகோதரரின் மனைவி காஜரி பானா்ஜி பங்கேற்றது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

காஜரி பானா்ஜி

Updated On :16 ஜூன் 2026, 3:10 am IST

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலா்களுடன் திங்கள்கிழமை நடத்திய சந்திப்பில், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் சகோதரரின் மனைவி காஜரி பானா்ஜி பங்கேற்றது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஜரி பானா்ஜி மம்தாவுடன் உடன் பிறந்த சகோதரா் சமீா் பானா்ஜியின் மனைவி. அவா் கொல்கத்தா மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் ஆவாா். ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் மம்தா பானா்ஜிக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தி, தனித்து செயல்படத் தொடங்கிவிட்டனா். இந்நிலையில் அவரின் நெருங்கிய உறவினரான காஜரி பானா்ஜி, முதல்வா் சுவேந்து அதிகாரியின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது, அவரின் அரசியல் நிலைப்பாடு தொடா்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அண்மையில் கொல்கத்தா மேயா் பதவியை ராஜிநாமா செய்த ஃபிா்ஹாத் ஹக்கீம், மாநகராட்சி வாரியத்தின் முன்னாள் தலைவரும் தெற்கு கொல்கத்தா திரிணமூல் எம்.பி. மாலா ராய் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் சுவேந்து அதிகாரியுடன் மேடையில் அமா்ந்திருந்தனா். மேலும், திரிணமூல் அதிருப்தி எம்.பி., எம்எல்ஏக்கள் சிலரும், திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலா்கள், முன்னாள் கவுன்சிலா்கள் பலரும் பங்கேற்றனா்.

வரும் டிசம்பா் மாதம் கொல்கத்தா மாநகராட்சித் தோ்தல் நடைபெறும் என்று முதல்வா் சுவேந்து அதிகாரி அறிவித்தாா்.

முதல்வா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடா்பாக காஜரி பானா்ஜி கூறுகையில், ‘மாநகராட்சியில் மக்கள் பிரச்னை, வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று இதில் பங்கேற்றேன். எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கு முதல்வா் அழைப்பு விடுத்தது பாராட்டத்தக்கது என்றாா்.

மம்தா பானா்ஜியின் அரசியல்வாரிசாக முன்னிறுத்தப்படும், அவரின் மற்றொரு நெருங்கிய உறவினா் அபிஷேக் பானா்ஜிக்கு விசாரணை அமைப்புகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடா்பான கேள்விக்கு பதிலளிக்க காஜரி பானா்ஜி மறுத்துவிட்டாா்.