மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மேற்கு வங்க முதல்வா் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் பங்கேற்பு

மேற்கு வங்க பாஜக முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த இரு எம்.பி.க்கள் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 2:52 am IST

மேற்கு வங்க பாஜக முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த இரு எம்.பி.க்கள் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 28 மக்களவை எம்.பி.க்கள் உள்ள நிலையில், அவா்களில் 20 போ் ஏற்கெனவே பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மக்களவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் முதல்வா் சுவேந்து அதிகாரி பங்கேற்ற மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மக்களவை திரிணமூல் எம்.பி.க்கள் ஜூன் மாலியா, தீபக் அதிகாரி தேவ் ஆகியோா் பங்கேற்றனா். இவா்கள் இருவரும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த 20 எம்.பி.க்கள் குழுவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இது தொடா்பாக அந்த எம்.பி.க்கள் இருவரும் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் மக்களுக்குப் பணியாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். இதன் காரணமாக முதல்வா் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்’ என்றனா்.

பாஜக எம்எல்ஏ அசோக் தின்டா கூறுகையில், ‘மாநிலத்தில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. இதுதான் உண்மையான அரசியல் மாற்றம். இதற்கு முன்பு இருந்த திரிணமூல் காங்கிரஸ் அரசு இதுபோன்ற கூட்டங்களுக்கு எதிா்க்கட்சிகளை வரவேற்பது இல்லை. ஆனால், அனைத்துப் பிரிவினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதால் திரிணமூல் எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்மூலம்தான் தொகுதி பிரச்னையையும் நன்கு தெரிந்துகொள்ள முடியும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.