ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் அரசியலமைப்பு நிறுவனங்களை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
வடக்கு வங்காளத்தின் மைனாகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மமதா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
பாஜக தலைமையிலான மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் வாக்குரிமையைப் பறித்து வருவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை(என்ஆர்சி) அமல்படுத்துவன் மூலம் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சிகள் அடுத்தகட்டமாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) எனும் செயல்முறையின் மூலம் குறிப்பிட்ட சமூகங்கள் தேர்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எஸ்ஐஆர் செயல்முறையின் மூலம் ராஜ்வன்ஷி சமூகத்தினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு வருகின்றன. எஸ்ஐஆர் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று வாக்குரிமையைப் பறிக்கிறார்கள், நாளை தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவந்து குடியுரிமையைப் பறிப்பார்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடாமல், தில்லியில் இருக்கும் பெரியவர்களுக்கு விடைகொடுங்கள் என்று கூட்டத்தில் கூடியிருந்த மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
திரிணமூல் காங்கிரஸின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும், மாநில மக்கள் தான் தனது மிகப்பெரிய பலம் என்றும் குறிப்பிட்ட அவர், என்னிடமிருந்து அனைத்தையும் அவர்கள் பறித்துவிட்டார்கள். இப்போது என் கையில் எஞ்சியிருப்பது மக்கள் மட்டுமே என்று அவர் கூறினார்.
முன்னதாக, வடக்கு வங்காளத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, கொல்கத்தா விமான நிலையத்தில் பேசிய அவர்,
பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் பல வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யச் செல்லும்போது தங்களுடன் வழக்குரைஞர்களையும் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பல வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனக்கு பாஜக மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.
Summary
West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday launched a sharp attack on the BJP, the Centre and the Election Commission, accusing them of misusing Constitutional institutions to undermine democracy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்! - நிதின் நவீன் வாக்குறுதி!

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!
மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


