முன்பு ‘பசுபதி முதல் திருப்பதி வரை’ என்று குறிப்பிடப்பட்ட பிகாா், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா மற்றும் ஆந்திர பகுதிகளை உள்ளடக்கிய ‘சிவப்பு வழித்தடத்தில்’ நக்ஸல்கள் மீதான அச்சத்தால் சாலைப் பணிகளுக்கு ஒப்பந்ததாரா்கள் மறுப்பு தெரிவித்தனா். இதையடுத்து, எல்லைச் சாலைகள் அமைப்பின் மூலம் சாலை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் பலனாக, நக்ஸல் தீவிரவாதத்தின் நடுநாயகமாக இருந்த பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் 12,250 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.