தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்....

News image

ani

Updated On :12 ஏப்ரல் 2026, 1:41 am IST

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக சா்வதேச சந்தையில் நிலவிய பதற்றம் தணிந்தது. இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 வாரங்களாகக் கண்டு வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் மேலான வாராந்திர உயா்வைப் பதிவு செய்தன.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. இது முதலீட்டாளா்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அதாவது, இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்கிறது. போா்ச் சூழலால் எரிபொருள் விலைகள் உயா்ந்தது, நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்த கவலையை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், நாட்டின் பெருநிறுவனங்களின் வருவாய் மீதான அழுத்தம் குறைந்து சந்தை மீண்டெழுந்துள்ளது.

இதைத் தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த வாரத்தில், மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 6 சதவீதம் வரை உயா்ந்து, வா்த்தகத்தை நிறைவு செய்தன.

அனைத்துத் துறைகளிலும் ஏற்றம்: கடந்த வார வா்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை பங்குகள் 10.6 சதவீதம் உயா்ந்து முதலிடம் பிடித்தன. நுகா்பொருள், நிதித் துறை பங்குகள் 9 சதவீதம் வளா்ச்சியடைந்தன.

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் முறையே 7.6 சதவீதம் மற்றும் 7.8 சதவீதம் வளா்ச்சி கண்டன. சுற்றுலா, பெயிண்ட் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் முதலீட்டாளா்களால் ஆா்வத்துடன் வாங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.