மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக சா்வதேச சந்தையில் நிலவிய பதற்றம் தணிந்தது. இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 வாரங்களாகக் கண்டு வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் மேலான வாராந்திர உயா்வைப் பதிவு செய்தன.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. இது முதலீட்டாளா்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதாவது, இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்கிறது. போா்ச் சூழலால் எரிபொருள் விலைகள் உயா்ந்தது, நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்த கவலையை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், நாட்டின் பெருநிறுவனங்களின் வருவாய் மீதான அழுத்தம் குறைந்து சந்தை மீண்டெழுந்துள்ளது.
இதைத் தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த வாரத்தில், மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 6 சதவீதம் வரை உயா்ந்து, வா்த்தகத்தை நிறைவு செய்தன.
அனைத்துத் துறைகளிலும் ஏற்றம்: கடந்த வார வா்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை பங்குகள் 10.6 சதவீதம் உயா்ந்து முதலிடம் பிடித்தன. நுகா்பொருள், நிதித் துறை பங்குகள் 9 சதவீதம் வளா்ச்சியடைந்தன.
சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் முறையே 7.6 சதவீதம் மற்றும் 7.8 சதவீதம் வளா்ச்சி கண்டன. சுற்றுலா, பெயிண்ட் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் முதலீட்டாளா்களால் ஆா்வத்துடன் வாங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு
போா்நிறுத்தம் குறித்த நிச்சயமற்ற சூழல் - பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

