கர்நாடக மாநிலம், தும்கூர் நகரத்தில் பறவைக் காய்ச்சலால் 44 மயில்கள் இறந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதன்முதலில் பதிவானதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் தும்கூர் நகரத்தில் 44 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் கூறினர்.
வனத்துறையின் தகவலின்படி, பறவைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டதில், எச்5என்1 வைரஸ் தொற்றுதான் இந்த இறப்புகளுக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே, நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தும்கூர் நகரத்தில் எந்தப் பகுதியிலும் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Officials stated on Friday (May 1) that 44 peacocks have died due to bird flu in the city of Tumkur, Karnataka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்!

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு



