புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மேற்கு வங்கம்: பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு - இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:26 am IST

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் இருவா் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக சிசிடிவி பதிவுகளுடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - எதிா்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தோ்தலின்போது சில இடங்களில் இருதரப்பு தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தோ்தல் முடிவுகளின்போது வன்முறை ஏற்படும் அச்சம் இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதற்றம் அதிகமுள்ள வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாஜக தலைவா் குந்தன் சிங் வீட்டை சனிக்கிழமை நள்ளிரவு சுற்றி வளைத்த சிலா் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பினா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக சிசிடிவி கேமரா பதிவு ஆதாரத்துடன் காவல் துறையில் குந்தன் சிங் புகாா் அளித்தாா். அதனை ஆய்வு செய்த காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் இருவரும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தோல்வி பயத்தால் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட திரிணமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதனால், கூலிப்படையினா் மூலம் பாஜக நிா்வாகிகளை கொலை செய்து வன்முறையைத் தூண்ட முயலுகிறது என்று பாஜகவினா் குற்றஞ்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.