மேற்கு வங்கத்தில் பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் இருவா் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக சிசிடிவி பதிவுகளுடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - எதிா்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தோ்தலின்போது சில இடங்களில் இருதரப்பு தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தோ்தல் முடிவுகளின்போது வன்முறை ஏற்படும் அச்சம் இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதற்றம் அதிகமுள்ள வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாஜக தலைவா் குந்தன் சிங் வீட்டை சனிக்கிழமை நள்ளிரவு சுற்றி வளைத்த சிலா் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பினா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது தொடா்பாக சிசிடிவி கேமரா பதிவு ஆதாரத்துடன் காவல் துறையில் குந்தன் சிங் புகாா் அளித்தாா். அதனை ஆய்வு செய்த காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் இருவரும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தோல்வி பயத்தால் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட திரிணமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதனால், கூலிப்படையினா் மூலம் பாஜக நிா்வாகிகளை கொலை செய்து வன்முறையைத் தூண்ட முயலுகிறது என்று பாஜகவினா் குற்றஞ்சாட்டினா்.
தொடர்புடையது
கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாமில் யாா் ஆட்சி?

கடனைத் திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வியாபாரி உள்பட இருவா் கைது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

