தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தியவா் சொத்து முடக்கம்

News image
Updated On :3 மே 2026, 10:59 pm

ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.

ஜம்மு மாவட்டம் சைனிக் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரஃபீக் அகமது. போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட வந்த அவா் மீது இது தொடா்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

குற்றங்கள் தொடா்பாக அண்மையில் உதம்பூா் காவல் துறையினா் அவரைக் கைது செய்து விசாரித்தனா். இப்போது, அவா் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் நிலம் உள்ளிட்ட அசையாத சொத்துகளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை முடக்க காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொண்டனா். முக்கியமாக போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவு 68 எஃப்-இன் கீழ் அந்த சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.