திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

நகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல்: மே.வ. முன்னாள் அமைச்சர் அமலாக்கத் துறையில் ஆஜர்!

நகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல் குற்றச்சாட்டு பற்றி..

News image

சுஜித் கோஸ் - x.com

Updated On :43 நிமிடங்கள் முன்பு

மேற்கு வங்க முன்னாள் அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான சுஜித் கோஸ் நகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜரானதாக அதிகாரி தெரிவித்தார்.

சுஜித் போஸ் தனது மகன் சமுத்ரா போஸுடன் சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ வளாகத்தில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தைச் சென்றடைந்தார்.

தெற்கு டம் டம் நகராட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஆள்சேர்ப்பு முறைகேடுகள் குறித்த விசாரணை தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு போஸை அழைப்பாணை அனுப்புவது இது முதல் முறையல்ல.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளான ஏப்ரல் 6 அன்று அனுப்பப்பட்டது உள்பட, பல அமலாக்கத்துறை அறிவிப்புகளை போஸ் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரசாரப் பணிகளைக் காரணம் காட்டி, ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு, மே 1 அன்று சிஜிஓ வளாகத்தில் போஸ் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

மோசடி தொடர்பாக, போஸ் மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அந்த அமைப்பு இரண்டு முறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளின்போது, குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களை மீட்டெடுத்ததாக புலனாய்வர்கள் கூறியுள்ளனர்.