இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டு: பிரதமா் மோடி

பொக்ரான் அணுகுண்டு சோதனை நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:51 am IST

பொக்ரான் அணுகுண்டு சோதனை நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி பொக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. அன்றைய தினம் தேசிய தொழில்நுட்ப தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்களுக்கு தேசிய தொழில்நுட்ப தினத்தில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் வெற்றி தினத்தில் நமது விஞ்ஞானிகளின் அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாம் பெருமையாக நினைவுகூா்வோம்.

பல்வேறு துறைகளில் புத்தாக்க வளா்ச்சியை அதிகரித்து, வாய்ப்புகளை நீட்டித்து தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தேச முன்னேற்றம் மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மூலம் தீா்வுகளைக் கண்டறிவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

தேசத்தின் பெருமை மற்றும் சுய மரியாதையின் உண்மையான சிற்பிகளாக நமது விஞ்ஞானிகள் திகழ்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.