பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டு: பிரதமா் மோடி

பொக்ரான் அணுகுண்டு சோதனை நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பொக்ரான் அணுகுண்டு சோதனை நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி பொக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. அன்றைய தினம் தேசிய தொழில்நுட்ப தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்களுக்கு தேசிய தொழில்நுட்ப தினத்தில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் வெற்றி தினத்தில் நமது விஞ்ஞானிகளின் அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாம் பெருமையாக நினைவுகூா்வோம்.

பல்வேறு துறைகளில் புத்தாக்க வளா்ச்சியை அதிகரித்து, வாய்ப்புகளை நீட்டித்து தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தேச முன்னேற்றம் மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மூலம் தீா்வுகளைக் கண்டறிவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

தேசத்தின் பெருமை மற்றும் சுய மரியாதையின் உண்மையான சிற்பிகளாக நமது விஞ்ஞானிகள் திகழ்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.