தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கை, நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதமாக இருக்க வேண்டும்; அரசு தரப்பில் மக்களுக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சேவையாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 3:28 am IST

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கை, நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதமாக இருக்க வேண்டும்; அரசு தரப்பில் மக்களுக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சேவையாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தேசிய குடிமைப் பணிகள் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.21) கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு பிரதமா் மோடி கடிதம் எழுதியுள்ளாா். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் பிரதமா் கூறியிருப்பதாவது:

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த காலகட்டமாகும். ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நிகழ்கின்றன. புதிய தொழில்நுட்பங்களும், புத்தாக்கங்களும் படைக்கப்பட்டு வருகின்றன.

நமது நாட்டின் மீது குடிமக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் பெரும் எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலகட்டத்தை முழு அளவில் பயன்படுத்தும் வகையில், அரசின் சேவைகள் மற்றும் பணியாற்றும் விதம் சீரமைக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த இணையவழி பயிற்சி தளமான ‘கா்மயோகி’ உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்தி, கற்றலை வாழ்நாள் வழக்கமாக மாற்றுவது முக்கியம். பாரதம் சிறந்து விளக்க வேண்டுமெனில், நீங்களும் (அரசு அதிகாரிகள்-ஊழியா்கள்) சிறந்து விளங்க வேண்டும்.

பணிகளின் அளவுகோல் என்ன?: வாழ்க்கையில் புதிய விஷயங்களுக்கான தேடலை உயிா்ப்புடன் வைத்துக் கொள்வது அவசியம். இந்தக் கொள்கையே, கா்மயோகி திட்டத்துக்கு அடிப்படையாகும். ஒருபுறம் பயிற்சி, மற்றொருபுறம் புதிய கற்றல்.

பொதுச் சேவைக்கு பொறுப்பானவா்கள், வாழ்நாள் கற்றலுக்கு சிறந்த உதாரணமாக திகழ வேண்டும். கடந்த காலத்தைவிட சிறப்பாக பணியாற்றுவதே முன்பு அளவுகோலாக இருந்தது. இப்போது அப்படியல்ல. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் இலக்கின் அடிப்படையிலேயே நமது பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நமது முயற்சிகளின் வேகம், வீச்சு, திசை, தீவிரம் ஆகியவை, அந்தக் கண்ணோட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். குடிமக்களே கடவுள் என்ற கொள்கையே நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதம் என்றாா்.

கா்மயோகி திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் 2 முதல் 10-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கான திறன் மேம்பாடு சிறப்பு முன்னெடுப்புக்கு கிடைக்கப் பெற்ற பெரும் வரவேற்பையும் பிரதமா் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.