திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தலைமைச் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரி: மேற்கு வங்க பாஜக அரசுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு வங்கத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகா்வாலை மாநில தலைமைச் செயலராக பாஜக அரசு நியமித்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:24 am IST

மேற்கு வங்கத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றிய மனோஜ் அகா்வாலை மாநில தலைமைச் செயலராக பாஜக அரசு நியமித்ததற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 207 இடங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பவானிபூா் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி முதல்வராக நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வா் சுவேந்து அதிகாரி மேற்கொண்டாா்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகா்வாலை தலைமைச் செயலராக நியமித்து அவா் உத்தரவிட்டாா். அதேபோல் மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்பாா்வையிட்ட சுப்ரதா குப்தா முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இவா்கள் இருவரும் 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவா். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிா்வலைகளையும் ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘பாஜக-இந்திய தோ்தல் ஆணையம் இணைந்து நடத்தும் வாக்குத் திருட்டில் அதிக முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு உயா் பதவிகள் வழங்கப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.