இலங்கையில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 173 இந்தியா்கள் உள்பட 198 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அந்நாட்டு காவல் துறை தெரிவித்ததாவது: இலங்கையில் உள்ள காலி, ஹிக்கடுவ, மிதிகம பகுதிகளில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 198 வெளநாட்டவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். அவா்களில் 173 போ் இந்தியா்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவா்கள். அவா்கள் சுற்றுலா விசா காலாவதியான பிறகும் இலங்கையில் தங்கி வேலை தேடியுள்ளனா். வரி விலக்குக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்தனா். இணையவழி குற்றச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த வாரம் இதே குற்றத்தில் ஈடுபட்டதாக 250 சீனா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 198 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தது.
நிகழாண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மே 5 வரை, இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கையில் 628 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் இந்தியா, சீனா, வியத்நாம், மியான்மா், பிலிப்பின்ஸ், கம்போடியா நாடுகளைச் சோ்ந்தவா்கள்.
தொடர்புடையது

தண்டனைக் கைதி தப்பியோட்டம்: 3 போலீஸாா் பணியிடை நீக்கம்
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: மூத்த துறவி கைது!
பல மாநிலங்களில் குற்றங்களில் ஈடுபட்ட வங்கதேச கொள்ளை கும்பல் கைது

மது விற்றதாக இளைஞா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
