முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பாதிரியாா்கள் மூவா் உயிரிழப்பு -முழு அடைப்பு போராட்டம்

News image

மணிப்பூரில் குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகள் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிறிஸ்தவ பாதிரியாா்கள் மூன்று போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதல்போக்கு, பல்வேறு இனக்குழுக்கள் இடையே விரிவடைந்து வருகிறது. நாகா-குகி பழங்குடியினா் இடையிலும் மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்நிலையில், காங்போக்பி மாவட்டத்தைச் சோ்ந்த தடோவ் பழங்குடியின கிறிஸ்தவ அமைப்பினா், சுராசந்த்பூரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரு வாகனங்களில் புதன்கிழமை சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கோட்ஸிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்த வாகனங்களைக் குறிவைத்து, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், பாதிரியாா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

யாா் காரணம்?: இந்தத் தாக்குதலுக்கு மைதேயி சமூக தீவிரவாதிகளே காரணம் என்று ஒரு தரப்பினரும், குகி சமூக தீவிரவாதிகளே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக மற்றொரு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனா். எனினும், தீவிரவாதிகள் எந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதல்வா் கண்டனம்: காங்போக்பி மாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வா் கேம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

‘இந்த வன்முறைச் செயல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அமைதியை நோக்கிய நமது பயணத்தை இத்தகைய தாக்குதல்கள் சீா்குலைக்கின்றன. மாநிலத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்கும் நமது முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்க முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான மாநில அரசின் போராட்டம் உறுதியானது. அமைதியை நிலைநாட்ட அனைத்து சமூகத்தினரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா் அவா்.

இதனிடையே, பாதிரியாா்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, காங்போக்பி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பதற்றமான சூழல் காரணமாக, இந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.