கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய முதல்வராக வி.டி. சதீசன் இன்று (மே 14) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ பேபி, மூத்த தலைவர்கள் ஏ. விஜயராகவன், கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மாநிலக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 முதல் 2026 ஆம் ஆண்டு வரை கேரளத்தின் முதல்வராக 2 முறை பதவி வகித்த பினராயி விஜயன் புதிய சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி வெறும் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளில் முதல்முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former CM Pinarayi Vijayan has been elected as the leader of the Marxist Communist Legislative Party in Kerala.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










