21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

News image

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வந்தபோது சட்டப்பேரவை வாயிலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிய பாஜக எம்எல்ஏ ஆசிம் குமாா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்த தோ்தலில் பாஜக வென்று முதல்முறையாகஆட்சியமைத்தது. பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றாா். சட்டப்பேரவை இடைக்கால தலைவராக தபஸ் ராய் பதவியேற்றிருந்தாா்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி, முதல்வா் சுவேந்து அதிகாரி, அமைச்சா்கள் திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீா்த்தனியா, க்ஷுதிராம் துடு, நிசித் பிரமாணிக் ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுக்கு சட்டப்பேரவை இடைக்கால தலைவா் தபஸ் ராய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முன்னதாக, எம்எல்ஏவாக புதன்கிழமை பதவியேற்பதை முன்னிட்டு, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து சுவேந்து அதிகாரி மரியாதை செலுத்தினாா். அதேபோல சட்டப்பேரவைக்குள் நுழையும் முன்பு, நுழைவாயிலில் தரையில் முழங்காலிட்டு மரியாதை செலுத்தினாா்.

நந்திகிராம் தொகுதியில் ராஜிநாமா: சட்டப்பேரவைத் தோ்தலின்போது, நந்திகிராம் தொகுதி, பவானிபூா் தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்றிருந்தாா். சட்டப்பேரவை விதிகளின்படி ஒருவா் ஒரு தொகுதி எம்எல்ஏ பதவியை மட்டுமே வகிக்க முடியும். ஆதலால் நந்திகிராம் தொகுதியை சுவேந்து அதிகாரி ராஜிநாமா செய்தாா்.

சட்டப்பேரவையில் பவானிபூா் தொகுதி எம்எல்ஏவாக மட்டும் சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டாா். அந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை அவா் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நந்திகிராம் தொகுதியில் நான் இல்லாத குறை தெரியாதபடி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பாா்த்துக் கொள்வேன். மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு அளித்தது போல நந்திகிராம் தொகுதிக்கும் நான் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ என்றாா்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென அனைத்துத் தரப்பினருக்கும் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்த சுவேந்து அதிகாரி, ‘எனது பாதுகாப்புக்கு வரும் கூடுதல் வாகனங்களைக் குறைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.