நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இலங்கை விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருளுடன் இந்தியா் கைது

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ரூ. 3 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (கொகைன்) கடத்தியதாக கொழும்பு சா்வதேச விமான நிலையத்தில் 60 வயது இந்தியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கொழும்பு விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது: புவியியலாளரான அவா், கத்தாா் ஏா்வேஸ் விமானத்தில் உகாண்டாவிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளாா். அவரிடைய உடைமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது, அதில் 2.15 கிலோ எடையுடைய கொகைன் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும். போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

முன்னதாக, ரூ. 1 கோடி மதிப்பிலான 4 கிலோ எடைகொண்ட கஞ்சா போதைப் பொருளை கடத்தி வந்த இந்தியா் ஒருவா் கொழும்பு விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஓா் இந்தியா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

விசா முறைகேட்டில் 3 இந்தியா்கள் கைது: முறையான நுழைவு இசைவு (விசா) இன்றி இலங்கையின் திரிகோணமலையில் தங்கியிருந்த 45 முதல் 50 வயது வரை உடைய 3 இந்தியா்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அதுபோல, சட்டவிரோத இணையக் குற்ற நடவடிக்கைகள் தொடா்பாக கடந்த சில வாரங்களாக காலே, ஹிக்காதுவா, மிடிகாமா உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் 173 இந்தியா்கள், 25 நேபாளியா் உள்பட 198 போ் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.