11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது!

போக்சோ வழக்கில் மகனை விசாரணைக்கு அனுப்பிவைத்த மத்திய அமைச்சர்!

News image

மகன் பந்தி பாகீரத் உடன் மத்திய இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் - IANS

Updated On :1 மணி நேரம் முன்பு

ஹைதராபாத் : மத்திய இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமாரின் மகன் பந்தி பாகீரத் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை(மே 16) விசாரணைக்கு ஆஜரானார்.

பந்தி பாகீரத் 17 வயது சிறுமியொருவருடன் நெருக்கமாகப் பழகி வந்ததுடன் அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகக் கொடுமை இழைத்ததாக சிறுமியின் அம்மா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் புகார் மீது பதியப்படும் போக்சோ வழக்கு பாகீரத் மீது கடந்த மே 8-ஆம் தேதி பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் முன் ஜாமீன் கோரி தொடர்ந்த மனு தெலங்கானா உயர்நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை(மே 15) தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அந்தச் சிறுமியும் அவர்தம் குடும்பத்தினரும் தம் மீது நெருக்கம் காட்டியதாகவும், இந்நிலையில் தமது மகளை தான் கட்டாயம் திருமணம் செய்தாக வேண்டுமெனவும் இல்லையேல் தன் மீது வழக்கு தொடருவோம் என்று அவர்கள் தரப்பு தொடர்ந்து மிரட்டியதாகவும் பாகீரத் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டுள்ளது.

பெண் வீட்டார் பாகீரத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ரூ. 5 கோடி தரவில்லை என்றால் சிறுமியின் தாயார் தற்கொலை செய்யப்போவதாக பயமுறுத்தினார் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து, அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் தெரிவித்திருப்பதாவது : “எமது மகன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சட்டத்தை மதித்து, நான் பாகீரத்தை வழக்குரைஞர்கள் வழியாக காவல் விசாரணைக்கு ஒப்படைத்துள்ளேன்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். அது, எமது மகனாயினும் சரி அல்லது சாமானிய குடிமகனானாலும் சரி. ஒவ்வொருவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.

நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு திங்கள்கிழமை வரும் என்று எதிர்பார்த்தாலும், நீதி அமைப்பின் மீதான மதிப்பைக் கருதி இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதால் எமது மகனை நான் விசாரணைக்காக அனுப்பியிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜரான பந்தி பாகீரத் இன்று(மே 16) கைது செய்யப்பட்டதாக தெலங்கானா காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

POCSO case: Bandi Sanjay asks son to appear before police, urges cooperation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.